Published : 16 May 2016 08:25 AM
Last Updated : 16 May 2016 08:25 AM
சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி, பெரம்பலூரில் திமுக, அதிமுகவினர் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் நேற்று முன்தினம் மாலை ஈடுபட்டிருந்தனர்.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே, திமுக, அதிமுகவினரின் வாகனப் பேரணி நேருக்குநேர் சந்தித்தது. அப்போது, இரு தரப்பினரும் பரஸ்பரம் கற்கள், செருப்பு, பாட்டில்களை வீசினர். இதில், அதிமுக நகரச் செயலாளர் ராஜ பூபதி உட்பட 2 பேர் காயமடைந் தனர்.
தாக்குதல் தொடர்பாக அதிமுக நகரச் செயலாளர் ராஜபூபதி அளித்த புகாரின்பேரில், திமுக கூட்டணிக் கட்சியான சமூக சமத்துவப் படை வேட்பாளர் சிவகாமி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உட்பட 5 பேர் மீது பெரம்பலூர் நகர போலீ ஸார் வழக்கு பதிவு செய்தனர். இதேபோல, திமுக நகரச் செயலாளர் பிரபாகரன் கொடுத்த புகாரின்பேரில், அதிமுக எம்.பி. மருதைராஜா, அதிமுக வேட்பாள ரும், எம்எல்ஏவுமான ரா.தமிழ் செல்வன் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT