Published : 23 May 2015 07:48 AM
Last Updated : 23 May 2015 07:48 AM

பீடி, சிகரெட் வாங்கிக் கொடுக்காததால் வேலூர் சிறையில் போலீஸாரை தாக்க முயன்ற கைதிகள்

வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் உள்ள விசாரணைக் கைதிகள் சுரேஷ்குமார், முருகன், சுரேந்தர், தேவா, அருண்குமார், ராஜேஷ், சதீஷ்குமார், ரகுமான் ஆகியோர் வழக்கு விசாரணைக் காக நேற்று முன்தினம் சென்னை க்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அரக்கோணம் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகூரான் தலைமையில் 9 போலீஸார் பாதுகாப்புக்கு உடன் சென்றனர். சென்னை 15-வது மெட்ரோபாலிடன் நீதிமன்ற த்தில் அனைவரும் ஆஜர்படுத் தப்பட்டனர். பின்னர், அனைவரும் வேலூர் சிறைக்கு திரும்பினர்.

வேலூருக்கு வரும் வழியில் போலீஸ் வாகனத்தை நிறுத்தி பீடி, சிகரெட், சாப்பாடு வாங்கிக் கொடுக்க வேண்டும் என கைதிகள் 8 பேரும் போலீஸாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். வழியில் வாகனத்தை நிறுத்த முடியாது என போலீஸார் தெரிவித்தனர்.

இரவு 8.30 மணியளவில் அனை வரும் வேலூர் சிறை வளாகத்துக்கு வந்தனர். வாகனத்தில் இருந்த 8 கைதிகளையும் சிறைக்குள் அழைத்துச் செல்ல போலீஸார் முயன்றனர். அப்போது, போலீஸா ரை தகாத வார்த்தையால் கைதிகள் திட்டியதுடன் கொலை மிரட்டல் விடுத்து தாக்க முயன்றனர். அங்கிருந்த சிறைக் காவலர்கள் கைதிகளை தடுத்து நிறுத்தினர்.

இது தொடர்பாக பாகாயம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் நாகூரான் கொடுத்த புகாரின்பேரில் சுரேஷ்குமார் உள்ளிட்ட 8 கைதிகள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x