Published : 16 Sep 2016 09:20 AM
Last Updated : 16 Sep 2016 09:20 AM

பிரணாப் முகர்ஜியுடன் அன்புமணி சந்திப்பு

கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப் படுவது தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார்.

இதுதொடர்பாக பாமக தலைமை நிலையம் நேற்று வெளியிட்ட செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை, டெல்லியில் உள்ள அவரது மாளிகையில் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நீடித்தது. அப்போது, காவிரி பிரச்சினை குறித்தும், அதை மையப்படுத்தி கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை குறித்தும் அன்புமணி ராமதாஸ் விளக்கினார். கர்நாடகத்தில் இயல்பு நிலைமையை ஏற்படுத்தும் வகையில் அங்கு ராணுவத்தையும், துணை ராணுவப் படைகளையும் அனுப்ப வேண்டும். நிலைமையை ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை கர்நாடகத்துக்கு அனுப்பும் படி பிரதமருக்கு ஆணையிட வேண் டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

தமிழக மற்றும் கர்நாடக முதல்வர் களை அழைத்து இப்பிரச்சினை குறித்து பேச்சு நடத்த வேண்டும். கர்நாடகத்தில் அமைதியை ஏற்படுத் துவதுடன், இரு மாநிலங்களிடையே சகோதரத்துவத்தை ஏற்படுத்து வதற்கும் நடவடிக்கை எடுக்கும்படி அவர்களுக்கு அறிவுறுத்துமாறு பிரதமருக்கு ஆணையிட வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டார்.

உறுதி அளித்தார்

வன்முறையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய இழப்பீடும், நிவாரண உதவிகளும் வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அன்புமணி ராமதாஸின் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசுக்கு உரிய அறிவுரைகளை வழங்குவதாகவும் குடியரசுத் தலைவர் உறுதி அளித்தார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x