Published : 30 Jan 2017 09:14 AM
Last Updated : 30 Jan 2017 09:14 AM

பிப்.3-ம் தேதி 48-வது நினைவு தினம்: அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார் சசிகலா

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 3-ம் தேதி அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அஞ்சலி செலுத்துகிறார்.

இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அண்ணாவின் 48-வது நினைவு தினம் பிப்ரவரி 3-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அன்று காலை 10 மணிக்கு மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினை விடத்தில் அதிமுக பொதுச்செய லாளர் சசிகலா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.

இந்த நிகழ்ச்சியி்ல் அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சியின் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், எம்ஜிஆர் மன்றம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் பங்கேற்கின்றனர்.

தமிழகம் மற்றும் அதிமுக அமைப்புகள் செயல்படும் புதுச் சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி மற்றும் அந்த மான் உள்ளிட்ட பிற மாநிலங் களிலும் பிப்ரவரி 3-ம் தேதி ஆங்காங்கே அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x