Published : 30 Dec 2016 09:50 AM
Last Updated : 30 Dec 2016 09:50 AM
தமிழக அரசின் ஆராய்ச்சி படிப்பு உதவித்தொகை திட்டத்தின்கீழ் முழு பிஎச்டி-யில் ஈடுபடும் மாணவர்களுக்கு மாதம் ரூ.3,000 வீதம் ஆண்டுக்கு ரூ.36 ஆயிரம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
இந்த உதவித்தொகை திட்டத் தின்கீழ் ஆண்டுதோறும் 60 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கு முதுகலை படிப்பில் 60 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
2016-ம் ஆண்டுக்கான உதவித் தொகை பெறுவதற்கு ஏதேனும் ஒரு அரசு அல்லது அரசு உதவி பெறும் கல்லூரியில் கடந்த ஜனவரி முதல் டிசம்பர் வரை பிஎச்.டி. படிப்பில் முதல் ஆண்டில் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
ஏற்கெனவே அறிவிக்கப் பட்டபடி, உரிய விண்ணப்பத்தில் ஆராய்ச்சி படிப்பு வழிகாட்டியின் (கைடு) பரிந்துரையுடன் கல்லூரி முதல்வரின் மேலொப்பத்துடன் டிசம்பர் 31-ம் தேதிக்குள் (நாளை) சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கு கிடைக்குமாறு அனுப்பிவைக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT