Published : 29 Nov 2014 10:05 AM
Last Updated : 29 Nov 2014 10:05 AM

பாசஞ்சர் ரயில் சேவைகளில் மாற்றம்

விழுப்புரம் யார்டில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் சில பாசஞ்சர் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

விழுப்புரம் வழித்தடத்தில் சில பாசஞ்சர் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது. இந்த மாற்றங்கள் டிசம்பர் 1, 4, 5 ஆகிய தேதிகளில் அமலில் இருக்கும். இதன்படி மதுரை-விழுப்புரம், விழுப்புரம்-மதுரை இடையேயான பாசஞ்சர் ரயில் விருத்தாச்சலம் வரை மட்டுமே இயக்கப்படும்.

திருப்பதி-புதுச்சேரி, புதுச்சேரி-திருப்பதி இடையேயான பாசஞ்சர் ரயில் சேவை செங்கல்பட்டுடன் நிறுத்தப்படும். சென்னை எழும்பூர்-புதுச்சேரி, புதுச்சேரி-சென்னை எழும்பூர் இடையேயான பாசஞ்சர் ரயில் திண்டிவனத்துடன் நிறுத்தப்படும். இது தவிர மேல்மருவத்தூர் விழுப்புரம், விழுப்புரம்-மேல்மருவத்தூர் மற்றும் விழுப்புரம் புதுச்சேரி, புதுச்சேரி-விழுப்புரம் உள்ளிட்ட பாசஞ்சர் ரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x