Published : 08 Nov 2016 08:19 AM
Last Updated : 08 Nov 2016 08:19 AM
பேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் மாவட்ட அளவில் பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. கல்வி மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்கள் இதில் கலந்துகொள்கிறார்கள்.
திருப்பூர், தருமபுரி மாவட்டங்களில் மாவட்ட அளவிலான போட்டிகள் ஏற்கெனவே நடத்தி முடிக்கப்பட்டுவிட்டன.
எஞ்சிய மாவட்டங்களில் போட்டிகள் நவம்பர் 8-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 10-ம் தேதி முடிவடையும் என்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித் துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT