Published : 06 Oct 2016 07:58 AM
Last Updated : 06 Oct 2016 07:58 AM
பல ஆயிரம் கோடி வருவாய்க்காக டாஸ்மாக் மூலம் பொதுமக்களின் வாழ்க்கையை சீரழிப்பதா என்று சமூக ஆர்வலர் மேதா பட்கர் கேள்வி எழுப்பினார்.
மதுவுக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் மது ஒழிப்பை வலியுறுத்தி சமூக ஆர்வலர் மேதா பட்கர் நாடு தழுவிய பேரணியை தொடங்கியுள்ளார். காந்தி ஜெயந்தி அன்று கன்னியாகுமரியில் தொடங்கிய இந்தப் பேரணி நேற்று சென்னை வந்தடைந்தது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே பல்வேறு கல்லூரிகளின் மாணவ, மாணவிகள் பங்கேற்ற மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில் மேதா பட்கர் கலந்து கொண்டார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
இந்தப் பேரணி ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் வழியாக மத்தியப் பிரதேசத்தில் உள்ள போபாலில் வரும் 10-ம் தேதி நிறைவடைகிறது. இந்தப் பேரணியில் மது ஒழிப்பு ஆர்வலர்கள், பெண்கள் திரளாக கலந்து கொள்கின்றனர்.
மாணவர் சமுதாயம் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வை பெற வேண்டும். பிஹார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் இருந்ததை அந்த மாநில உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. உயிருக்கு தீங்கு விளைவிக்கும் மதுவை விற்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இதனை ஒழிக்க மத்திய மாநில அரசுகள் முன் வர வேண்டும். தமிழகத்தில் மதுவுக்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
மது ஒழிப்பு போராட்டத்தில் சசிபெருமாள் தனது உயிரையே துறந்தார். ஆனால், அதிமுக அரசு அசைந்து கொடுக்கவில்லை. தமி ழக முதல்வர் இன்றைக்கு உடல் நலம் சரியில்லாமல் உள்ளார். அவர் விரைவில் நலம்பெற வாழ்த்து கிறேன். அதே நேரத்தில், ரூ.18 ஆயி ரம் கோடியிலிருந்து ரூ.24 ஆயிரம் கோடி வரை டாஸ்மாக் மூலம் வருமானம் கிடைக்கிறது என்பதற் காக மதுவை விற்பனை செய்யக் கூடாது. இந்த வருமானத்துக்காக பொதுமக்களின் உயிரையும் வாழ்க் கையையும் சீரழிக்கக் கூடாது.
இவ்வாறு மேதா பட்கர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT