Published : 14 Aug 2015 05:44 AM
Last Updated : 14 Aug 2015 05:44 AM

நில மோசடி வழக்கில் ஈ.வி.பி. தீம் பார்க் உரிமையாளர் பெருமாள்சாமி கைது

ரூ.93 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அப கரித்ததாக ஈ.வி.பி. தீம் பார்க் உரிமையாளர் பெருமாள்சாமி, அவ ரது மகள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை வேளச்சேரியை சேர்ந்த ராஜ்குமார் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், “போரூர் அருகே கொளப்பாக்கத்தில் எனது தாயாரின் பெயரில் 2 ஏக்கர் 30 சென்ட் நிலம் உள்ளது. எனது தாயார் இறந்த நிலையில் அந்த நிலத்தை பூந்தமல்லி அருகேயுள்ள ஈ.வி.பி. தீம் பார்க் உரிமையாளர் ஈ.வி.பெருமாள்சாமி, அவரது மகள் லீலாதேவி ஆகியோர் போலியான ஆவணங்கள் மூலம் அபகரித்துவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது நிலத்தை மீட்டுத்தர வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இதேபோல சென்னையை சேர்ந்த பிரேமா என்பவர் கொடுத்த புகாரில், “தற்போது ரூ.80 கோடி மதிப்புள்ள நிலத்தை ஈ.வி.பெருமாள்சாமியும், அவரது மகளும் சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் அபகரித்துவிட்டனர்” என்று கூறியிருந்தார்.

இந்த புகார்களின்பேரில் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் செல்வக்குமார் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். முதல் கட்டமாக நடந்த விசாரணை முடிவில், ஈ.வி.பெருமாள்சாமியும், அவரது மகள் லீலாதேவியும் சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் நிலங்களை அபகரித்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து நேற்று காலையில் அவர்கள் இருவரையும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். இருவரையும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x