Published : 16 May 2016 10:20 AM
Last Updated : 16 May 2016 10:20 AM

தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?- ஜெயலலிதா கருத்து

இன்னும் 2 நாட்கள் பொறுத்திருந்தால் மக்கள் தீர்ப்பு என்னவென்று தெரியும் என வாக்களித்த பின்னர் முதல்வர் ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி தவிர 232 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்று வருகிறது.

காலை 10 மணியளவில் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வாக்களித்தார் முதல்வர் ஜெயலலிதா. அவருடன் சசிகலாவும் வந்திருந்தார்.

வாக்களித்துவிட்டு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இன்னும் 2 நாட்கள் பொறுத்திருந்தால் மக்கள் தீர்ப்பு என்னவென்று தெரியும்" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x