Published : 28 Jun 2016 09:04 AM
Last Updated : 28 Jun 2016 09:04 AM
வட சென்னை மாவட்ட காங் கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பாக காங் கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அவர் அனுப் பியுள்ள கடிதத்தில், ‘கடந்த 13 ஆண்டுகளாக வட சென்னை மாவட்டத் தலைவராகவும், 3 முறை ராயபுரம் தொகுதியில் போட்டியிடவும் வாய்பளித்த தங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலில் 3 முறையும் என்னால் வெற்றி பெற முடியவில்லை. இந்தத் தோல்விக்கு பொறுப்பேற்று வட சென்னை மாவட்டத் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங் கோவன் ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை சோனியா காந்தி ஏற்றுக்கொண் டுள்ளார். இந்நிலையில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராயபுரம் மனோவும் ராஜினாமா செய்திருப்பது குறிப்பிடத் தக்கது.
ஜி.கே.வாசனின் தீவிர ஆதர வாளராக இருந்து வந்த மனோ, தமிழக காங்கிரஸ் தலைவராக இளங் கோவன் பொறுப்பேற்றதும் அவரது ஆதரவாளராக மாறினார். மனோவைத் தொடர்ந்து இளங்கோவனுக்கு ஆதரவாக மேலும் சில மாவட்டத் தலைவர்கள் ராஜினாமா செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் தமிழக காங்கிரஸில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT