Published : 14 Aug 2015 06:05 AM
Last Updated : 14 Aug 2015 06:05 AM

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தில் 22 பேர் தேர்வு

தமிழகத்தில் இருந்து தேசிய நல்லா சிரியர் விருதுக்கு 22 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் இருந்து 15 ஆசிரியர்களும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 7 ஆசிரியர்களும் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.

தமிழக அளவில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றோர் விவரம் வருமாறு:

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

ஆர்.தாஸ் (தலக்கஞ்சேரி, திருவள்ளூர்), எஸ்.சுவர்ணபாய் (மீஞ்சூர்), வி.கணேசன் (பொன் டூர்), சி.ஏகாம்பரம் (கீழமணக்குடி), என்.பாலசுப்பிரமணியன் (கீழ்மாந்தூர்,), கே.சிற்றம்பலம் (இடையப்பட்டி), எஸ்.காளிமுத்து (வில்வதம்பட்டி, ), பி.தனராஜ், (பொன்னம்பாளையம்).

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

ஆர்.விஜயலலிதா (நரிக்கட் டியூர்), டீ.ராணி சிவகாமி, (சூண்டி).

அரசு உதவிபெறும், தனியார் தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

எஸ்.அமலோற்பவம் (செயின்ட் ஜான்ஸ், ராயப் பேட்டை, சென்னை), ஏ.ஜோசப்பின் செல்வமேரி (ராஜா பரமேஸ்வரி, அண்ணா நகர் மதுரை), டி.எஸ்.அன்புஹெப்சிபாய் (டீ.என்.டி.டீ.ஏ. ராஜமானியபுரம், தூத்துக்குடி), எஸ்.பொன்ராஜ் (சி.எம்.எஸ்.மேரி ஆர்டன், பாளையங்கோட்டை, திருநெல்வேலி), எம்.செல்வ குமார் (சென்னை ராயபுரம் ராஜரிஷி அர்த்தநாரீச வர்மா தொடக்கப் பள்ளி).

அரசு, அரசு உதவிபெறும், தனியார், மெட்ரிக். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள்

வி.ஹரிமூர்த்தி (தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, திருத்துறையூர், கடலூர்), என்.ராமசந்திரன் (உடற்கல்வி ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்), சி.தனபால் (முதுகலை பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, குமலன்குட்டை, ஈரோடு), எ.பிரான்சிஸ் சேவியர் (தலைமை ஆசிரியர், ஜோசப் கல்லூரி மேல்நிலைப் பள்ளி, திருச்சி), பி.ஜார்ஜ் பால் (உதவி தலைமை ஆசிரியர், டான் பாஸ்கோ மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, சென்னை) தங்கபிரகாஷ் (முதல்வர், சன்பீம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, மேட்டுகுளம், வேலூர்), வி.பழனியப்பன் (முதல்வர், சேரன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, வெண்ணெய்மலை, கரூர்).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x