Published : 30 Dec 2016 11:09 AM
Last Updated : 30 Dec 2016 11:09 AM

தேசிய துப்பாக்கி சுடும் போட்டி: மதுரை மாணவிக்கு 2 தங்கப்பதக்கம்

மதுரை கல்லூரி மாணவி வர்ஷா, புனேயில் நடந்த தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் 2 தங்கப்பதக்கங்கள் பெற்றுள் ளார்.

புனேயில் கடந்த 12-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற மதுரை லேடி டோக் கல்லூரி மாணவி வர்ஷா, பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் ப்ரோன் பிரிவு, 50 மீட்டர் ரைபிள் ப்ரோன் ஜூனியர் பிரிவு ஆகிய இரண்டு போட்டிகளிலும் தங்கப் பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவர், தொடர்ந்து மாநில, தேசிய போட்டிகளில் 85-க்கும் மேற்பட்ட தங்கம், வெள்ளி பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார். தற்போது 6 பேர் கொண்ட இந்திய அணியில் வர்ஷா இடம்பெற்றுள்ளார். இன்னும் சர்வதேச போட்டியில் விளையாட ஆரம்பிக்கவில்லை. தற்போது தேசிய போட்டியில் 2 தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளதால் இந்தியா சார்பில் விரைவில் சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x