Published : 07 Dec 2016 08:24 AM
Last Updated : 07 Dec 2016 08:24 AM

தேசிய தலைவராக திகழ்ந்தவர் ஜெ. - ராகுல் புகழாரம்

தேசியத் தலைவராக ஜெயலலிதா திகழ்ந் ்தார் என்று காங்கிரஸ் கட்சி துணைத் தலை வர் ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.

ஜெயலலிதாவின் உடல் பொதுமக் கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி அரங்க வளாகத்தில் நேற்று வைக்கப்பட் டிருந்தது. மாலை 4.05 மணிக்கு ராஜாஜி அரங்கத்துக்கு வந்த காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ஜெய லலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:

ஜெயலலிதா ஒரு சிறந்த அரசியல் தலைவராக அடையாளம் காணப்பட்ட வர். அவர் தமிழகத்துக்கு மட்டும் தலை வராக இல்லை. தேசிய தலைவராக திகழ்ந்தவர். அவரை இழந்து வாடும் தமிழக மக்களுக்கு காங்கிரஸ் சார்பிலும், எனது சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x