Published : 09 Jul 2017 10:33 AM
Last Updated : 09 Jul 2017 10:33 AM

தெலங்கானா மாநிலத்தில் இருந்து தம்பதியை கடத்திய யோகா ஆசிரியர்கள் கைது: திருவண்ணாமலை போலீஸார் நடவடிக்கை

தெலங்கானா மாநிலத்தில் இருந்து தம்பதியை கடத்திய யோகா ஆசிரியர்களை திருவண்ணாமலை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும் போது, ‘‘தெலங்கானா மாநிலம் சைபராபாத் பகுதியில் வசிக்கும் தம்பதி ஜெகதீஷ்கென்டி(44), கிரண் கென்டி(40) ஆகியோர் மென் பொருள் நிறுவனத்தில் பணியாற்று கின்றனர். இவர்கள் கடந்த 5 நாட் களுக்கு முன்பு கடத்தப்பட்டனர். கிரண்கென்டியின் அக்கா கணவர் மதனா பாலசுப்ரமணியத்திடம் பணம் கேட்டு கடத்தல் கும்பல் மிரட்டியுள்ளது.

இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் மாதம்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய் யப்பட்டது. கடத்தப்பட்டவர்களை மீட்க 3 தனிப்படைகள் அமைக் கப்பட்டு விசாரணை நடைபெற் றது. அதில், யோகா பயிற்சியாளர் களுக்கு கடத்தலில் தொடர்பு இருப் பது உறுதி செய்யப்பட்டது. அதன் பேரில், தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில், கடத்தல் நபர்கள் மற்றும் கடத்தப்பட்ட தம்பதிகள் திருவண்ணாமலையில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட போலீஸாருக்கு தெலங் கானா தனிப்படை போலீஸார் தகவல் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில், திரு வண்ணாமலை உதவி காவல் கண்காணிப்பாளர் ரவாளி பிரியா தலைமையிலான போலீஸார், திரு வண்ணாமலை திருவூடல் தெரு வில் உள்ள மடத்தில் தங்கி யிருந்த யோகா ஆசிரியர்கள் காந்த்ரெட்டி(46), உஷாஸ்ரீ நம்பி(42) ஆகியோரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். மேலும் கடத்தப்பட்ட தம்பதி ஜெகதீஷ்கென்டி, கிரண்கென்டி ஆகியோரை மீட்டனர்.

கடத்தப்பட்ட தம்பதிகள், தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள யோகா மையத்தில் பயிற்சி பெற்று வந்தனர். இருவரும் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுவதால், அவர்களை கடத்தி பணம் பறிக்க யோகா ஆசிரியர்கள் திட்ட மிட்டுள்ளனர். பயிற்சி வகுப்பின் போது அவர்களுக்கு போதை மாத்திரை கலந்த பானத்தை கொடுத் துள்ளனர். தம்பதி மயங்கியதும் காரில் கடத்தி ஸ்ரீரங்கம், ஓசூர் ஆகிய பகுதிகளில் சுற்றித் திரிந்துள்ளனர்.

ஸ்ரீரங்கத்தில் தங்கியிருந்த போது, கோயில் முன்பு எடுக்கப் பட்ட புகைப்படத்தை முகநூலில் யோகா ஆசிரியர்கள் பதிவு செய் துள்ளனர். அதுதான், அவர்களது நடமாட்டத்தை கண்காணிக்க உதவியது

மேலும், கடத்தப்பட்ட தம்பதியை சுயநினைவுக்கு திரும்பவிடாமல் போதை மாத்திரை கலந்த பான கத்தை தொடர்ந்து கொடுத்துள்ள னர். அவர்களிடம் இருந்து 20 பவுன் நகையை பறித்துள்ளனர். மேலும் ரூ.2 லட்சத்தை வங்கிக் கணக்கில் உறவினர்கள் மூலம் பெற்றுள்ளனர். மீட்கப்பட்ட தம்பதி, தெலங்கானா மாநில போலீஸாரிடம் ஒப்படைக்கப்படுவார்கள்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x