Published : 23 May 2015 07:52 AM
Last Updated : 23 May 2015 07:52 AM

திருமாவளவன் தனிச் செயலாளர் கொலை: புதுக்கோட்டையை சேர்ந்தவர்களுக்கு தொடர்பா? - 2 பேரிடம் போலீஸ் விசாரணை

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் தனிச் செயலாளர் வெற்றிச்செல்வன் கொலை தொடர்பாக புதுக் கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேரை சென்னை போலீஸார் விசாரணைக்காக நேற்று அழைத்துச் சென்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகேயுள்ள செரிய லூர் ஜமீன் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த த.சரவணனுக்கும் கடந்த 20-ம் தேதி கீரமங்கலத்தில் திருமணம் நடைபெற்றது. இருவரும் புதுக்கோட்டையில் தங்கியிருந் தனர். இந்நிலையில், சென்னை யிலிருந்து நேற்று முன்தினம் இரவு செரியலூர் ஜமீன் கிராமத்துக்கு வந்த போலீஸார், சரவணன் மற்றும் அவரது உறவினரான குமரேசன் ஆகியோரை விசார ணைக்காக சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து போலீஸ் கூறும் போது, “வெற்றிச்செல்வன் சென் னையில் கடந்த 20-ம் தேதி கொலை செய்யப்பட்டார். அவருக் கும், சரவணனுக்கும் முன்வி ரோதம் இருந்துள்ளது. சரவணன் மீது நடவடிக்கை கோரி போலீஸில் வெற்றிச்செல்வன் புகார் அளித்திருந்தார். எனவே, சரவணனையும், அவரது உறவி னரான குமரேசனையும் விசார ணைக்காக சென்னை போலீஸார் அழைத்துச் சென்றுள்ளதாகத் தெரிகிறது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x