Published : 20 Sep 2015 11:11 AM
Last Updated : 20 Sep 2015 11:11 AM

திருச்செங்கோடு பெண் டிஎஸ்பி தற்கொலை: பிரேத பரிசோதனை வீடியோவில் பதிவு

தற்கொலை செய்துகொண்ட திருச் செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா வின் உடல் நேற்று சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரி சோதனை செய்யப்பட்டது. பரி சோதனை அனைத்தும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது.

கடலூர் மாவட்டம், கோனூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவ ரது மனைவி கலைச்செல்வி. இவர்களது மகள் விஷ்ணுபிரியா குரூப்-1 தேர்வு மூலம் நேரடியாக டிஎஸ்பி பணியில் சேர்ந்து திருச்செங்கோட்டில் டிஎஸ்பி-யாக பணிபுரிந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சேலம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கை விஷ்ணுபிரியா விசாரித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் விஷ்ணுபிரியா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண் டார்.

சேலம் அரசு மருத்துவமனை யில் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு வைக்கப்பட்டிருந் தது. நேற்று பல்வேறு அமைப்பினர் மருத்துவமனை பிரேதக் கூடத்தில் திரண்டிருந்தனர்.

விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி மற்றும் உறவினர்கள் பிரேதத்தை வாங்க மறுத்த நிலையில், பிரேத பரிசோதனை கூடத்துக்கு வந்த டிஐஜி வித்யா குல்கர்னி, மாநகர காவல் ஆணையர் அமல் ராஜ் உள்ளிட்டவர்கள் விஷ்ணு பிரியாவின் தந்தை மற்றும் உற வினர்களிடம் பேச்சுவார்த்தை நடத் தினர்.

அரசு மருத்துவருடன் தங்களுக்கு விருப்பமான தனி யார் மருத்துவரும் பிரேதப் பரிசோதனையில் ஈடுபட வேண்டும். பரிசோதனையை வீடியோ மூலம் பதிவு செய்ய வேண்டும். வழக்கை சிபிஐ-க்கு மாற்றிட வேண்டும் என விஷ்ணுபிரியாவின் தந்தை மற்றும் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, நேற்று மதியம் 3 மணிக்கு டிஐஜி வித்யா குல்கர்னி மேற்பார்வையில் தலைமை மருத்துவர் கோகுலரமணன், மருத் துவர் சங்கீதா உட்பட மூன்று மருத்துவர்கள் பிரேத பரிசோத னையில் ஈடுபட்டனர். பிரேதப் பரிசோதனை வீடியோ மற்றும் புகைப்படங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டது. பிரேதப் பரிசோத னைக்கு பின்னர் விஷ்ணுபிரியா வின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிபிஐ விசாரணைக்கு தந்தை வலியுறுத்தல்

சேலம் அரசு மருத்துவமனையில் விஷ்ணுபிரியாவின் உடலை பெற்றுக்கொள்ள வந்த அவரது தந்தை ரவி கூறியதாவது:

எனது மகள் நேர்மையானவர், தைரியமானவர். குடும்ப பிரச்சினை எதுவும் கிடையாது. காதல் விவகாரமும் இல்லை. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் விநாயகர் சதுர்த்திக்கு விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தபோது மன உளைச்சலுடன் காணப்பட்டார். இன்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தரப்பிலும், யுவராஜ் தரப்பிலும் டார்ச்சர் இருந்துவந்தது. வாட்ஸ் அப் மூலம் யுவராஜ் பேசி டார்ச்சர் செய்து மிரட்டியுள்ளார். இவ்வாறு இரண்டு பக்கமும் அவருக்கு இடையூறு இருந்துள்ளது.

விஷ்ணுபிரியா தற்கொலை செய்தபோது 15 பக்கம் கொண்ட கடிதம் எழுதியிருந்ததாக கூறினார்கள். ஆனால், என்னிடம் 4 பக்கம் மட்டும் காண்பித்தார்கள். அது என்னுடைய மகள் கையெழுத்து என்று கூறினேன். மீதி உள்ள பக்கங்களை என்னிடம் காண்பிக்கவில்லை. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

துணிவும், துயர முடிவும்

விஷ்ணுபிரியா துணிச்சல்மிக்கவர், நேர்மையான அதிகாரி என பெயர் பெற்றவர். பணியில் சந்தித்த சங்கடங் களையும், பிரச்சினைகளையும் வெளி காட்டி வேதனைப்படாமல் பணிபுரிந்த விஷ்ணுபிரியா, சக தோழிகளுடன் மட்டுமே உயர் அதிகாரிகள் ‘டார்ச்சர்’ பற்றி கூறியுள்ளார்.

குடும்பத்திலோ, பணியாற்றும் இடத்திலோ தனது கஷ்டங்களை வெளிக்காட்டாமல் உறுதிபட இருந்த விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக காவலர்கள் மத்தி யில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x