Published : 30 Jan 2017 10:14 AM
Last Updated : 30 Jan 2017 10:14 AM
திருச்சியில் பிப்ரவரி 24-ம் தேதி ஜெ.தீபா பேரவை சார்பில் மாநில மாநாடு நடைபெறும் என அரியலூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பொன்.ப.இளவழகன் தெரிவித்தார்.
அரியலூர் கல்லூரிச் சாலை யில் ஜெ.தீபா பேரவை தலைமை அலுவலகத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அலுவலகத்தை திறந்துவைத்து இளவழகன் பேசியதாவது: முதல்வர் ஜெய லலிதா மறைவுக்குப் பிறகு, மக்களால் சகித்துக்கொள்ள முடியாத நிகழ்வுகள் ஆட்சியிலும், கட்சியிலும் நடைபெற்று வருகின் றன. ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள அதிமுகவில், 2,600 பேர் மட்டுமே ஒரு நபரை பொறுப்பு பொதுச் செயலாளராக நியமித் துள்ளனர்.
சசிகலா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதை உண்மையான கட்சித் தொண்டர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. 99.90 சதவீத தொண்டர்கள் ஜெ.தீபா வுக்கு ஆதரவான மனநிலையில் உள்ளனர்.
திருச்சியில் பிப்ரவரி 24-ம் தேதி ஜெ.தீபா கலந்துகொள்ளும் மாநில மாநாடு நடைபெற உள்ளது. வரும் உள்ளாட்சித் தேர்தலில் ஜெ.தீபா நிறுத்தும் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெறுவார் கள். அதன்பிறகு ஆட்சியும், கட்சியும் அவரை தேடிவரும் சூழ்நிலை உருவாகும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT