Published : 09 Jul 2017 10:21 AM
Last Updated : 09 Jul 2017 10:21 AM
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
ஆந்திர கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது.
அடுத்துவரும் 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஓரிரு முறை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT