Published : 29 Nov 2014 03:20 PM
Last Updated : 29 Nov 2014 03:20 PM
தென்மேற்கு வங்கக் கடலில் நீடிக்கும் காற்றழுத்தத் தாழ்வு நிலையானது மேலும் வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு நிலையாக உருவாகி வருவதால், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது, "இலங்கை அருகே மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.
நாளையும் கனமழை நீடிக்கும். தமிழக மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்லும் படி அறிவுறுத்தப்டுகின்றனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் குடவாசலில் 6 செ.மீ. மழையும், குமரி மாவட்டம் இரணியலில் 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT