Published : 22 Mar 2017 07:53 AM
Last Updated : 22 Mar 2017 07:53 AM

தமாகா போட்டியிடாது; யாருக்கும் ஆதரவும் இல்லை: சேலத்தில் ஜி.கே.வாசன் அறிவிப்பு

சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தமாகா போட்டியிட வில்லை; யாருக்கும் ஆதரவும் இல்லை என்று அக்கட்சியின் தலை வர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

சேலத்தில் நேற்று ஜி.கே.வாசன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சமீப காலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் பணநாயகமே வென் றுள்ளது. இதனால், இடைத்தேர் தல் மீது தமாகாவுக்கு நம்பிக்கை கிடையாது. எனவே, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தமாகா போட்டியிடாது. யாருக்கும் ஆதரவு அளிக்காது. இடைத்தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக் குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும். விவசாயிகளின் நலனை காக்க மத்திய, மாநில அரசுகள் தவறி விட்டன. வறட்சியால் பாதிக்கப்பட் டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு தவறிவிட்டது.

சேலம் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் கைக்கான் வளைவு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். சேலத்தைச் சேர்ந்த மாணவர் முத்துகிருஷ்ணன் மரணத்தில் சந்தேகம் உள்ளதால், சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x