Published : 06 Oct 2016 09:33 AM
Last Updated : 06 Oct 2016 09:33 AM

தசரா பண்டிகையை முன்னிட்டு உயர் நீதிமன்றத்துக்கு 9 நாட்கள் விடுமுறை

தசரா பண்டிகையை முன்னிட்டு உயர் நீதிமன்றத்துக்கு வரும் அக்டோபர் 8-ம் தேதி முதல் அக்டோபர் 16-ம் தேதி வரை 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் என்.சதீஷ்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தசரா பண்டிகையை முன்னிட்டு சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு வரும் அக்டோபர் 8-ம் தேதி முதல் அக்டோபர் 16-ம் தேதி வரை 9 நாட்கள் விடுமுறை விடப் படுகிறது. இந்த விடுமுறை நாட்களில் அவசர வழக்குகளை மட்டும் விசாரிக்க விடுமுறை கால நீதிபதிகளை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி அக்டோபர் 14-ம் தேதி ஒருநாள் செயல்படும் விடுமுறை கால நீதிமன்றத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ராஜேந்திரன், என்.ஆதிநாதன் ஆகி யோரும், மதுரை கிளையில் நீதிபதிகள் எஸ்.விமலா, கே.கல்யாணசுந்தரம் ஆகி யோரும் வழக்குகளை விசாரிப்பர். இதற்காக அக்டோபர் 13-ம் தேதி பதிவுத்துறை முழுமையாக செயல்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x