Published : 20 Sep 2015 11:05 AM
Last Updated : 20 Sep 2015 11:05 AM

டெங்கு காய்ச்சலைத் தடுக்க மாவட்டந்தோறும் குழு

தமிழகத்தில் டெங்கு காய்ச் சலைத் தடுக்க மாவட்டந்தோறும் ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் கே.குழந்தைசாமி கூறியதாவது:

தமிழகத்தில் டெங்கு காய்ச் சலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்கள் வீடுவீடாக சென்று, மக்களிடம் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். காய்ச்சலை தடுக் கவும், கண்காணிக்கவும், கட்டுப் படுத்தவும் அந்தந்த மாவட்ட ஆட்சி யர் தலைமையில் குழு அமைக் கப்பட்டுள்ளது.

கட்டுமானப் பணிகள் நடை பெறும் இடங்களை கண்காணிக் கும்படி சுகாதாரத்துறை அதிகாரி களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காய்ச்சல் வந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும். அரசு மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலை யங்களில் நிலவேம்பு கசாயம் தயார் நிலையில் இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x