Published : 23 May 2015 07:42 AM
Last Updated : 23 May 2015 07:42 AM

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவு வெளியீடு

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் ஆகிய பதவிகளில் 4,963 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய இந்த தேர்வினை ஏறத்தாழ 10 லட்சம் பேர் எழுதினர். இந்த நிலையில், தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. தேர்வெழுதியவர்கள் தங்கள் மதிப்பெண் விவரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x