Published : 07 Dec 2016 08:50 AM
Last Updated : 07 Dec 2016 08:50 AM

ஜெ. இறந்த அதிர்ச்சியில் 43 பேர் பலி

முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்த செய் தியை அறிந்ததும் அதிர்ச்சியில் தமிழகம் முழுவதும் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த குன்னத்தூர் கிராமத்தில் வசித்த சுரேஷ்(25) என்பவர் ஜெயலலிதா உயிரிழந்த செய்தியைப் பார்த்து நேற்று தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜெயலலிதா உயிரிழந்த செய்தியை தொலைக் காட்சிகளில் பார்த்ததும், அதிர்ச்சியில் பலர் உயிரிழந்ததாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:

திருவண்ணாமலை கீழ்நாத்தூர் முத்தாலம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மோகன்(41), வட ஆண்டாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம்(51), செய்யாறு அடுத்த கூழமந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஓட்டுநர் பன்னீர்செல்வம்(43), சேத்துப்பட்டு அடுத்த முருகானந்தல் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன்(65), வந்தவாசி அடுத்த காரணி கிராமத்தைச் சேர்ந்த மண்ணு(72), செங்கம் அடுத்த அல்லியந்தல் கிராமத்தைச் சேர்ந்த குள்ளம்மாள்(62), சின்னத்தாயி(87) ஆகிய 7 பேர் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.

உடுமலை அருகே அந்தியூர் கிராமத் தைச் சேர்ந்த பெரியதிருமன் மனைவி தங்கம்மாள்(62), அவிநாசி சவகட்டுப் பாளையத்தைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளர் மல்லி(75) ஆகியோர் அதிர்ச்சியில் மார டைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் தென்னேரியைச் சேர்ந்த ரசூல்பாய்(70), திருக்காலிமேடு பகுதி யைச் சேர்ந்த தனசேகர்(45) ஆகியோரும் அதிர்ச்சியில் மாரடைப்பால் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள மேலப்பட்டரை கிராமத்தைச் சேர்ந்த நைனியப்பன், பழவேற்காடு அருகே உள்ள பசியாவரம் கிராமத்தைச் சேர்ந்த சின்னகுழந்தை, மீஞ்சூர் அருகே உள்ள தேவதானம் கிராமத்தைச் சேர்ந்த மீனம்பாள் ஆகிய 2 மூதாட்டிகளும் முதல்வர் ஜெயலலிதா மரணச் செய்தியை அறிந்து அதிர்ச்சியில் மரணமடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா திருச்சிற்றம்பலம் கிராமத்தில் வசித்து வந்த தங்கவேலு(72), விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே உள்ள மணக்குளத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன்(58), திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஒன்றியம் கூவனூத்து ஊராட்சி அதிமுக செயலாளர் கோவிந்தன் மனைவி நல்லப்பொண்ணு(45), ரெட்டியார்சத்திரம் அருகே நீலமலைக்கோட்டை ஊராட்சி குமாரபாளையத்தைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் கே.சுப்பிரமணி, ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள தேவர் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மாரி என்பவர் மனைவி இருளாயி(60), சிக்கல் அருகே உள்ள மத்தியல் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன்(58), ஆகியோரும் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக உறவி னர்கள் தெரிவித்தனர்.

ஈரோடு அருகே கருங்கல்பாளையம் கிருஷ் ணம்பாளையம் மாதவகாடு பகுதியைச் சேர்ந்த எம்.ஜி.ஆர்.தாசன் (எ) சிதம்பரம்(48), ஈரோடு அருகே நசியனூர் பேட்டை பெரி யாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சின்னசாமி(60) ஆகியோரும் அதிர்ச்சியில் இறந்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் வைரி செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சிங்காரம்(45) என்பவர், நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் வந்தபோது, முதல்வர் மரணச் செய்தியில் அதிர்ச்சியில் இறந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே பாண்டமங்கலத்தைச் சேர்ந்த சேகர் மனைவி மீனா(52), கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் வீரமலை அதிமுக கிளைச் செயலாளர் சின்ன பிள்ளை(63), சின்னகரடியூர் முன்னாள் அதிமுக கிளைச் செயலாளர் மாணிக்கம்(70), விளங்காமுடி கிராமத்தைச் சேர்ந்த பாப் பாத்தி(60), போச்சம்பள்ளி அருகே உள்ள நரால்சந்தம்பட்டியைச் சேர்ந்த செல்வ பாஸ்கரன்(28), பர்கூர் அருகே உள்ள செக்கில் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த நாக ராஜ்(62) ஆகியோரும் அதிர்ச்சியில் இறந் துள்ளனர். சாமல்பட்டி அருகே உள்ள தனியார் பால் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்த வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த கருங்காலிப்பட்டியைச் சேர்ந்த பால சுப்பிரமணியன்(55) அதிர்ச்சியில் இறந்தார்.

பர்கூர் அருகே உள்ள ஒரப்பம் ஊராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர் கிருஷ் ணன்(35), காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம் சாப்பர்த்தி ஊராட்சி பனகமுட்லு கிராமத்தைச் சேர்ந்த காளியம்மாள்(65) என கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 பேர் பலியாகி உள்ளனர். சேலம் ஐயந்திருமாளிகை ஜட்ஜ் ரோடு பகுதியைச் சேர்ந்த சரவணன்(40), இடைப்பாடி அருகே அதிமுக நகர மகளிர ணியைச் சேர்ந்த கமலா(52) ஆகியோரும் ஜெயலலிதா உயிரிழந்த செய்தியை கேட்டதும், அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் திருப்பெயர் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன்(55) விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். திருச்சி மாவட்டம் எல்லக்குடியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி(65), புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மேலப்பொன்னன்விடுதியைச் சேர்ந்த மனுநாயகி(23), தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம்(50), நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அண்டர்காடு பகுதியைச் சேர்ந்த சோமு(63), கீச்சாங் குப்பத்தைச் சேர்ந்த ராமன்(54) ஆகியோரும் அதிர்ச்சியில் மரணமடைந்ததாக அவர்க ளுடைய உறவினர்கள் தெரிவித்தனர்.

சிதம்பரம் அருகே சிவபுரி கிராமத்தைச் சேர்ந்த ராமு மனைவி ராஜேஸ்வரி(55), கிள்ளை அருகே உள்ள நெடுஞ்சி கிராமத் தைச் சேர்ந்த சந்திரவதனம்(65) ஆகியோரும் அதிர்ச்சியில் இறந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x