Published : 23 May 2015 08:01 AM
Last Updated : 23 May 2015 08:01 AM
முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள ஜெய லலிதாவுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது: தமிழக முதல்வராக 5-வது முறையாகப் பொறுப்பேற்க உள்ள அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு பாஜக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி அவர் முதல்வர் பதவியை இழந்த பிறகு கடந்த 7 மாதங்களில் மாநில அரசு நிர்வாகம் முடங்கியிருந்தது. இனி இந்த நிலை மாறும் என நம்புகிறேன். பல திட்டங்களை அவர் அறிவிக்க இருப்பதாக செய்திகள் வருகின்றன. பாஜகவைப் பொறுத்தவரை நல்லது நடந்தால் பாராட்டுவோம். குறைகள் இருந்தால் சுட்டிக் காட்டுவோம். ஊழல் இல்லாத தமிழகத்தையே மக்கள் விரும்புகிறார்கள். அரசு நிர்வாகத்தில் குஜராத்தைப் போல தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் ஊழலை ஒழிக்க முடியும்.
மீண்டும் முதல்வராகும் ஜெயலலிதா, சமூக அவலங்களுக்கு காரணமான டாஸ் மாக் மதுக்கடைகளை மூட வேண்டும். இதனை முதல் அறிவிப்பாக அவர் வெளியிட வேண்டும். நீதிமன்ற தீர்ப்பின் மூலம் ஜெயலலிதாவுக்கு நிம்மதி கிடைத்துள்ளது. வளர்ச்சித் திட்டங்கள் மூலம் தமிழக மக்க ளுக்கு நிம்மதி கிடைக்க ஜெயலலிதா பாடுபட வேண்டும் என தமிழிசை தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT