Published : 05 Jan 2017 08:47 AM
Last Updated : 05 Jan 2017 08:47 AM
தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் நேற்று வெளி யிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தாததற்கு காங்கிரஸ் கட்சி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென பொன்.ராதா கிருஷ்ணன் கோரியிருக்கிறார். ஜல்லிக்கட்டு நடத்து வதற்கு 2011-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கை தடையாக இருப்பதாகக் கூறுவது முழு பூசணிக் காயை சோற்றில் மறைக்கிற செய லாகும். அந்த அறிவிக்கைக்குப் பிறகு 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் மதுரை நீதிமன்ற ஆணையின் பேரில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடந்ததை பொன்.ராதாகிருஷ்ணன் மறுக்க முடியுமா?
உண்மையிலேயே தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டுமென பாஜக அரசு நினைத்தால் அவசர சட்டத்தின் மூலம் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும். அதற்கான முயற்சியில் தமிழக பாஜகவினர் ஈடுபட வேண்டும். அதற்கு மாறாக காங்கிரஸ் கட்சியை சீண்டிப் பார்ப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
விலங்குகள் வதை தடைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர நாடாளுமன்றத்தில் 50 உறுப்பினர்களைப் பெற்றிருக்கிற அதிமுக எடுத்த முயற்சி என்ன? இதற்கெல்லாம் விளக்கம் கூறாமல் காங்கிரஸ், திமுக கூட்டணி அரசின் மீது பழிபோட்டு திசை திருப்பி பொறுப்பை தட்டிக்கழிக்க பாஜக, அதிமுகவினர் முயற்சிக்கூடாது என்று அறிக்கையில் திருநாவுக் கரசர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT