Published : 30 Dec 2016 10:42 AM
Last Updated : 30 Dec 2016 10:42 AM

சென்னை நுங்கம்பாக்கம் எஸ்பிஐ வங்கியில் தீ விபத்து

சென்னை நுங்கம்பாக்கத்தில் சாஸ்திரி பவன் எதிரே அமைந்துள்ள எஸ்பிஐ வங்கியில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தீ விபத்து ஏற்பட்டது.

கட்டிடத்தின் 3-வது தளத்தில் தீ பற்றி எரிகிறது. இத்தளத்தில் எஸ்பிஐ காப்பீடு நிறுவனம் இயங்கி வருகிறது.

சம்பவ இடத்துக்கு 4 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன. தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்னும் விபத்துக்கான காரணம் அதுகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

இப்பகுதியில் மிக நெருக்கமாக கட்டிடங்கள் அமைந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

தீ பிடித்த கட்டிடத்திலிருந்து ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வீரர்கள் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் தகவல்கள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன.

படம்: எல்.சீனிவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x