Published : 05 Dec 2015 12:41 PM
Last Updated : 05 Dec 2015 12:41 PM
கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்ததால் முடங்கியிருந்த சென்னை எழும்பூர் ரயில் நிலையம் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து இன்று (சனிக்கிழமை) இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தெற்கு ரயில்வே அறிவிப்பில்,
1. ரயில் எண் 02635 சென்னை எழும்பூர் - மதுரை இடையேயான சிறப்பு ரயில் பிற்பகல் 3.45 மணியளவில் புறப்படுகிறது.
2. ரயில் எண் 02605 சென்னை எழும்பூர் - திருச்சி இடையேயான சிறப்பு ரயில் பகல் 2.00 மணியளவில் புறப்படுகிறது.
3. ரயில் எண் 02631 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையேயான சிறப்பு ரயில் இரவு 8.15 மணியளவில் புறப்படுகிறது.
4. ரயில் எண் 06105 சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் இடையேயான சிறப்பு ரயில் மாலை 4.40 மணியளவில் புறப்படுகிறது.
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT