Published : 05 Dec 2015 12:41 PM
Last Updated : 05 Dec 2015 12:41 PM

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் மீண்டும் இயங்கத் தொடங்கியது

கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்ததால் முடங்கியிருந்த சென்னை எழும்பூர் ரயில் நிலையம் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து இன்று (சனிக்கிழமை) இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தெற்கு ரயில்வே அறிவிப்பில்,

1. ரயில் எண் 02635 சென்னை எழும்பூர் - மதுரை இடையேயான சிறப்பு ரயில் பிற்பகல் 3.45 மணியளவில் புறப்படுகிறது.

2. ரயில் எண் 02605 சென்னை எழும்பூர் - திருச்சி இடையேயான சிறப்பு ரயில் பகல் 2.00 மணியளவில் புறப்படுகிறது.

3. ரயில் எண் 02631 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையேயான சிறப்பு ரயில் இரவு 8.15 மணியளவில் புறப்படுகிறது.

4. ரயில் எண் 06105 சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் இடையேயான சிறப்பு ரயில் மாலை 4.40 மணியளவில் புறப்படுகிறது.

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x