Published : 22 Mar 2017 05:37 PM
Last Updated : 22 Mar 2017 05:37 PM

சீமை கருவேல மரங்களை அகற்ற தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும்: வைகோ

சீமை கருவேல மரங்களை அகற்ற தமிழக அரசு சட்டம் இயற்றி தேவையான நிதி ஒதுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சீமை கருவேல மரங்களால் ஏரி, குளம், கண்மாய்களில் தண்ணீர் கொள்ளளவு குறைந்துவிடுகின்றது.

சீமை கருவேல மரங்களை முற்றாக அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆனால், பொதுப்பணி துறை கண்மாய்கள் பலவற்றில் சீமை கருவேல மரங்களை அகற்ற உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை.

சீமை கருவேல மரங்களை அகற்ற தமிழக அரசு சட்டம் இயற்றி தேவையான நிதி ஒதுக்க வேண்டும்.

ஏரி, கண்மாய், குளங்களில் பல ஆண்டுகளாக படிந்துள்ள வண்டல் மற்றும் கரம்பை மண்களை விவசாயிகள் இலவசமாக அள்ளி செல்ல முதல்வர் ஆணை பிறப்பிக்க வேண்டும்'' என்று வைகோ கூறியுள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x