Published : 31 Jan 2017 08:52 AM
Last Updated : 31 Jan 2017 08:52 AM

சிலை கடத்தல் வழக்கில் கைதான சுபாஷ் கபூரிடம் ஐஜி விசாரணை

சிலை கடத்தல் வழக்கில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் உள்ள சுபாஷ் சந்திர கபூரிடம் ஐஜி பொன்.மாணிக்கவேல் விசா ரணை நடத்தினார்.

தமிழக கோயில்களில் இருந்து சிலைகள் திருடப்பட்ட வழக்கின் முக்கிய குற்றவாளியான சுபாஷ் சந்திர கபூர் சில ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டார். அங்கிருந்து தமிழகம் அழைத்து வரப்பட்ட அவர், புழல் சிறையில் அடைக் கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், 2 மாதங்களுக்கு முன் அவரை திருச்சி மத்திய சிறைக்கு மாற்றம் செய்தனர். இங்கு சிறை நிர்வாகத்தின் பலத்த கண்காணிப்பின் கீழ் அவர் அடைத்து வைக்கப்பட் டுள்ளார்.

இந்நிலையில், தமிழக காவல் துறையின் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் நேற்று முன்தினம் திருச்சி மத்திய சிறைக்கு வந்தார். அங்கு சுபாஷ் சந்திர கபூரைச் சந்தித்து, சிலை கடத்தல் வழக்கு விவரங்கள் தொடர்பாக 2 முறை விசாரணை நடத்தினார்.

அப்போது, மத்திய சிறைக் கண்காணிப்பாளர் நிகிலா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந் தனர்.

இதுகுறித்து சிறை வட்டாரங் களில் விசாரித்தபோது, “சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய சுபாஷ் சந்திர கபூரிடம் காவல் துறை அதிகாரிகள் அவ்வப்போது விசாரணை நடத்துவது வழக்கம். அதன்படியே தற்போதும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x