Published : 22 Mar 2017 09:30 AM
Last Updated : 22 Mar 2017 09:30 AM
பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் உதயசூரியன், திமுக தலைவர் கருணாநிதி, செயல் தலை வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை புகழ்ந்து பேசிவிட்டு தனது உரை யைத் தொடங்கினார். அப்போது ‘‘சிபி சக்கரவர்த்தி, மனுநீதிச் சோழன், பாண்டிய மன்னன்…’’ என்று பேரவைத் தலைவரை புகழ்ந்த அவர், தான் பேசி முடிக்கும் வரை குறுக்கிடாமல் இருக்க வேண் டும் என்றும் கேட்டுக் கொண்டார். நிதியமைச்சர் ஜெயக்குமாரை ‘அண்ணன்’ என குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய திமுக உறுப்பினர் டி.உதயசூரியன், ‘‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வருகிறது. உதயசூரியன் என்ற எனது பெயரைக் குறிப்பிட்டு எனது பேச்சில் அமைச்சர்கள் குறுக்கிடா மல் இருக்க வேண்டும்’’ என்றார்.
உதயசூரியனின் பேச்சுக்கு பதி லளிக்க எழுந்த அமைச்சர் ஜெயக்குமார், திமுக உறுப் பினர் என அவரது பெயரைக் குறிப்பிடாமல் பேசத் தொடங்கி னார். அப்போது திமுக உறுப்பினர் கள், உதயசூரியனின் பெயரைக் குறிப்பிடுமாறு மீண்டும் மீண்டும் வலியுறுத்தினர். பின்னர், உறுப் பினரின் பெயரை ‘ரைசிங் சன்’ என ஆங்கிலத்தில் குறிப்பிட்டுவிட்டு அவருக்கு ஜெயக்குமார் பதி லளித்தார். இதனால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
மத்திய அரசுடன் முரண்பாடு?
பட்ஜெட் விவாதத்தின்போது, செங்கம் தொகுதி திமுக உறுப் பினர் கிரி பேசும்போது, ‘‘ஆதி திராவிட மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்துக்கான நிதியை மத்திய அரசு தராததற்கு காரணம், மாநில அரசு அதற்கான சான்றிதழ் களை வழங்காததுதான். மத்திய அரசுக்கும் இந்த அரசுக்கும் இடை யில் உள்ள முரண்பாடுகளால்தான் நிதி வழங்கப்படவில்லை’’ என்றார்.
இதற்கு பதிலளித்த பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டை யன், ‘‘மத்திய, மாநில அரசுகளி டையே முரண்பாடு ஏதுமில்லை. தேவையான நிதி கேட்டு பெறப் படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT