Published : 01 Jan 2017 11:27 AM
Last Updated : 01 Jan 2017 11:27 AM
அதிமுக பொதுச் செய லாளராக வி.கே சசிகலா பொறுப் பேற்பதை எதிர்த்து ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக தொண்டர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா நேற்று மதியம் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதா நினைவிடம் அமைந்துள்ள பகுதியில் நேற்று காலை 11.15 மணிக்கு அதிமுக தொண்டர் ஒருவர் எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதைப்பார்த்த போலீஸார், அவரை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விசாரணையில்..
இதுபற்றி போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், தற்கொலைக்கு முயன்றவர் திருவள்ளூர் மாவட்டம் காரணோடை ஜிஎன்டி ரோடு பகுதியை சேர்ந்த சிவாஜி ஆனந்த் (48) என்பதும், இவர் அதிமுக தொண்டர் என்பதும் தெரியவந்தது. வி.கே.சசிகலா பொதுச் செயலாளராக பொறுப்பேற்க எதிர்ப்பு தெரிவித்தே அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT