Published : 14 Aug 2015 05:59 AM
Last Updated : 14 Aug 2015 05:59 AM

கோட்டையில் 69-வது சுதந்திர தின கொண்டாட்டம்: நாளை கொடியேற்றுகிறார் முதல்வர்

இந்தியாவின் 69-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படு கிறது. இதை முன்னிட்டு தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா தேசிய கொடியை ஏற்றுகிறார்.

சுதந்திர தின விழாவுக்காக தலைமைச்செயலகத்தில் சட்டப் பேரவை கட்டிடம், நாமக்கல் கவிஞர் மாளிகை, கோட்டை முகப்பு ஆகிய இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள் ளது. வெடிகுண்டு தடுப்பு பிரிவைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட குழுக் களை சேர்ந்த போலீஸார் குறிப் பிட்ட இடைவெளியில் புனித ஜார்ஜ் கோட்டை வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலை யில் மூன்றாவது மற்றும் இறுதிக் கட்ட அணிவகுப்பு ஒத்திகை நேற்று காலை நடந்தது. அதில், முதல்வரின் வருகை, அவர் அணிவகுப்பு மரி யாதையை ஏற்பது, முப்படை வீரர்கள் மற்றும் போலீஸாரின் அணி வகுப்புகள் ஒத்திகை பார்க்கப் பட்டன.

நிகழ்ச்சிப்படி, சுதந்திர தினத் தன்று காலை 8.40 மணிக்கு புனித ஜார்ஜ் கோட்டை வரும் முதல்வரை, தலைமைச் செயலர் வரவேற்று, முப்படை தளபதிகள், தமிழக டிஜிபி மற்றும் சென்னை மாநகர போலீஸ் ஆணையரை அறிமுகப்படுத்தி வைப்பார். இதைத் தொடர்ந்து, அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக் கொள்கிறார்.

அங்கு தேசிய கொடியை ஏற்றி வைக்கும் முதல்வர் ஜெயலலிதா, சுதந்திர தின உரையாற்றிவிட்டு 13 பிரிவுகளின் கீழ் விருதுகளை வழங்குகிறார். இதில் இந்த ஆண்டு அப்துல்கலாம் விருதும் வழங்கப்படுகிறது. பின்னர் ஆதர வற்றோர் இல்லங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி விட்டு, மீண்டும் போயஸ்கார்டன் செல்கிறார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை பொதுத்துறை செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x