Published : 03 Jul 2017 11:18 AM
Last Updated : 03 Jul 2017 11:18 AM
கேளிக்கை வரியை ரத்து செய்யவேண்டும் என்ற திரைத்துறையினரின் கோரிக்கை குறித்து முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தி தகுந்த முடிவு எடுக்கப்படும் என நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.
தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி திரையரங்கு உரிமையாளர்கள் இன்று (திங்கள்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக இன்று காலை நிதியமைச்சர் ஜெயக்குமாரையும் தமிழ்த் திரையுலகப் பிரதிநிதிகள் சந்தித்து தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்விகளுக்குப் பதிலளித்த நிதியமைச்சர் ஜெயக்குமார், "ஏற்கெனவே நிரணயிக்கப்பட்ட வரி விகிதங்கள் அடிப்படையில்தான் தற்போது திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி வசூலிக்கப்படுகிறது.
கேளிக்கை வரியை ரத்து செய்யவேண்டும் என்ற திரைத்துறையினரின் கோரிக்கையானது கொள்கை ரீதியிலினான முடிவு எடுக்கப்பட வேண்டிய விவகாரம்.
எனவே, இது தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து தகுந்த முடிவு எட்டப்படும்" என்றார்.
மோசடி செய்தால் நடவடிக்கை:
அவர் மேலும் கூறும்போது, "உணவுப் பொருட்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். மோசடி செய்யம் வகையில் ஜிஎஸ்டி வசூலிப்பவர்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் நலனை பாதிக்காத வகையில் தான் ஜிஎஸ்டி உள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT