Published : 01 Aug 2015 09:51 AM
Last Updated : 01 Aug 2015 09:51 AM
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை 45 ஆக உயர்த்தக் கோரி போட்டித் தேர்வெழுதும் இளைஞர்கள் சார்பில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று அப்துல் கலாம் நினைவு ரத்த தான முகாம் நடந்தது. தமிழக குரூப்-1 தேர்வர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த முகாமில் 30-க்கும் மேற்பட்டவர்கள் ரத்த தானம் செய்தனர்.
இதுகுறித்து அந்த கூட்டமைப் பின் ஒருங்கிணைப்பாளர் தேன் மொழி கூறும்போது, “கேரளா, குஜராத், ஹரியானா, மேற்கு வங்காளம், அசாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு 45 ஆக உள்ளது.
தமிழகத்திலும் இதேபோன்று குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை 45 ஆக உயர்த்த வேண்டும். எங்களின் இந்த கோரிக்கையை முதல்வரின் மேலான கவனத்துக்கு கொண்டு செல்வதற்காக அப்துல் கலாம் நினைவு ரத்த தான முகாமை நடத்தினோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT