Published : 08 Nov 2016 08:11 AM
Last Updated : 08 Nov 2016 08:11 AM

கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றுபட வேண்டும்: தா.பாண்டியன் விருப்பம்

உழைக்கும் வர்க்கத்தினர், சிறுபான்மையினர் உள்ளிட்டோரை அடக்கும் ஆட்சியாளர்கள் வந்துவிட்டதால் அதை மாற்றியமைக்க இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் உடனே ஒன்றுபட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் வலியுறுத்தினார்.

சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலத் தலைமை அலுவலகத்தில் ரஷ்ய நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு விழா சிறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், நவம்பர் புரட்சி தின கொடியை கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு ஏற்றினார். கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், நவம்பர் புரட்சி தின உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் தா.பாண்டியன் கூறிய தாவது: நவம்பர் புரட்சியின் நூற் றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் உழைக்கும் வர்க்கம், முற்போக்கை விரும்பும் சக்திகள் அனைவரும் திரண்டு கொண்டாட வேண்டும். கம்யூ னிஸ்ட் கட்சி 1925-ல் இருந்து அமைப்பு ரீதியாக செயல்படு கிறது. 1964-ல் கவலை தரத்தக்க வகையில் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டது அதன் விளைவாகத்தான் வகுப்பு வாதம் இன்று டெல்லி கோட்டை யில் கொடியேற்றி இருக்கிறது. எதை முறியடிக்க விரும்பினோமோ அதுவே கோட்டைக்கு வந்துவிட்ட பிறகு நாம் பிரிந்திருப்பது சரியல்ல.

சிறுபான்மையினர், உழைப்பவர்கள், முற் போக்கு கருத்துகள் எழுதுபவர்கள், வெளியிடு பவர்கள், பாடல் பாடுகிறவர்கள் உள்பட அனை வரையும் அடக்கும் ஆட்சியாளர்கள் வந்துவிட்ட தால் அதை மாற்றியமைக்க வேண்டிய கடமை வந்திருக்கிறது. அதற்கு படைதிரட்ட வேண்டும் என்றால் முன்நிபந்தனை விதிக்காமல் முதலில் நாம் உடனே ஒன்றுபட வேண்டும் என்றார்.

மார்க்சிஸ்ட் அலுவலகம்

நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு விழாவை யொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் கொடியை கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் ஏற்றி வைத்து உரையாற்றினார். இதில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராஜன், உ. வாசுகி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x