Published : 03 Jul 2017 09:27 AM
Last Updated : 03 Jul 2017 09:27 AM
கதிராமங்கலம் விவகாரம் தொடர் பாக அந்த கிராம மக்கள் முற்று கையிட்டுவிடக்கூடாது என்ப தற்காக தலைமைச் செயலகம், முதல்வர் வீடு மற்றும் ஆளுநர் மாளிகை முன்பு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டம் கதிராமங் கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் எண்ணெய் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. இதில், இருந்து அடிக்கடி எண்ணெய் கசிவு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
எனவே, இந்த நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங் களை நடத்தி வருகின்றனர். போராட்டத்துக்கு ஆதரவு தெரி வித்து இளைஞர்கள் மெரினாவில் போராட்டம் நடத்தி விடக்கூடாது என்பதற்காக அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில், கதிராமங் கலத்தைச் சேர்ந்த 60 குடும் பங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் 3 குழுவாகப் பிரிந்து ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலகம், முதல்வர் வீட்டிற்குச் சென்று மனு அளிக்க உள்ளதாக தகவல் பரவியது. இதைத் தொடந்து கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் வீடு, தலைமைச் செயலகம், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பாக போலீஸார் குவிக்கப்பட்டனர். இதேபோல், தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT