Published : 30 Dec 2016 09:54 AM
Last Updated : 30 Dec 2016 09:54 AM

கணவரை காணவில்லை என சசிகலா புஷ்பா எம்பி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு முடித்து வைப்பு

அதிமுகவினரால் தாக்கப்பட்ட எனது கணவரைக் காணவில்லை என சசிகலா புஷ்பா எம்பி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று முடித்து வைத்து உத்தரவிட்டது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்பி மற்றும் அவரது கணவர் லிங்கேஸ்வர திலகன் ஆகியோர் அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவை தேர்வு செய்யக்கூடாது என கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், சசிகலா புஷ்பா சார்பில் அவரது வழக் கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்ற விடுமுறை கால நீதி பதிகளின் வீட்டுக்குச் சென்று ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், ‘‘அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்காக விண்ணப்பம் பெற அதிமுக கட்சி அலுவலகத்துக்கு சென்ற எனது கணவர் லிங்கேஸ்வர திலகன் உள்ளிட்ட எனது தரப்பினர் மீது அங்கு இருந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் எனது கணவர் பலத்த காயமடைந்தார். அப்போது அங்கு வந்த போலீஸார், லிங் கேஸ்வர திலகனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால், அதன்பிறகு எனது கணவர் இன்னும் வீடு திரும்ப வில்லை. அவரைக் காணவில்லை என தமிழக டிஜிபி, சென்னை மாநகர போலீஸ் ஆணையர் ஆகி யோருக்கு புகார் மனு கொடுத் துள்ளேன். எனவே எனது கண வரை மீட்டு ஒப்படைக்க வேண்டும்’’ என அதில் கோரி யிருந்தார். இந்நிலையில், இந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நேற்று விடுமுறை கால நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வி.பார்த்தி பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்ற வியல் வழக்கறிஞர், ‘‘அதிமுக அலுவலகத்தில் நடந்த சம்பவம் குறித்து 3 வழக்குகளை போலீஸார் பதிவு செய்துள்ளனர். அதில் ஒரு வழக்கில் லிங்கேஸ்வர திலகனை கைது செய்தனர். பின்னர் அவரை இன்று (நேற்று) காலை 9.30 மணிக்கே ஜாமீனில் விடுவித்து விட்டனர்’’ என கூறினார். அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

அதிமுக கட்சி அலுவலகத்தில் எனது கணவர் லிங்கேஸ்வர திலகன் மீது தாக்குதல் நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x