Published : 31 May 2016 08:12 AM
Last Updated : 31 May 2016 08:12 AM
பட்டினப்பாக்கத்தில் கடலில் கட்டுமரம் கவிழ்ந்ததால் தண்ணீரில் தத்தளித்த நண்பர்களை காப் பாற்றிவிட்டு நீரில் மூழ்கி மீனவர் ஒருவர் இறந்துவிட்டார்.
சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் டுமீல் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்ய ராஜ்(52). இவரது நண்பர்கள் தேசப் பன், ஆனந்த். 3 பேரும் நேற்று காலையில் மீன் பிடிப்பதற்காக கட்டுமரத்தில் கடலுக்குள் சென்ற னர். ஆனால் அவர்களின் கட்டு மரம் கடலில் திடீரென கவிழ்ந்து விட்டது. 3 பேரும் நீரில் தத்த ளித்தனர். அப்போது ஆனந்த், தேசப்பன் ஆகிய இருவரும் கட்டுமரத்தில் ஏறுவதற்கு ஆரோக் யராஜ் உதவி செய்திருக்கிறார். கட்டுமரத்தில் ஏறிய இருவரும் பின்னர் ஆரோக்யராஜை பிடித்து கட்டு மரத்தில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
கரைக்கு வந்த ஆரோக்யராஜ் மயக்கம் அடையவே, அருகே இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். நண்பர்களை காப்பாற்றி உயிர்விட்ட ஆரோக்யராஜ் உடலை பார்த்து அப்பகுதி மக்கள் கதறி அழுதனர். இதுகுறித்து மெரினா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT