Published : 22 Mar 2017 08:30 PM
Last Updated : 22 Mar 2017 08:30 PM

ஒரே நாளில் தங்கம் பவுனுக்கு ரூ.336 உயர்ந்தது

சென்னையில் புதன்கிழமை ஒரே நாளில் தங்கம் பவுனுக்கு ரூ.336 உயர்ந்தது.

சர்வதேச அளவில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படுகிறது.

புதன்கிழமை சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.42 அதிகரித்து ரூ.2 ஆயிரத்து 784-க்கும், பவுனுக்கு ரூ.336 அதிகரித்து ரூ.22 ஆயிரத்து 272-க்கும் விற்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை கிராம் ரூ.2 ஆயிரத்து 742-க்கும், பவுன் ரூ.21 ஆயிரத்து 936-க்கும் விற்பனையானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x