Published : 23 May 2015 07:28 AM
Last Updated : 23 May 2015 07:28 AM

எலாவூர்-சூலூர்பேட்டை மின் ரயில் ரத்து

கும்மிடிப்பூண்டி சூலூர்பேட்டை மார்க்கத்தில் ரயில்பாதை பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால், வரும் 23 (இன்று) முதல் 26-ம் தேதி வரை புறநகர் ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்குரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கும்மிடிப்பூண்டி சூலூர்பேட்டை மார்க்கத்தில் ரயில்பாதை பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால், வரும் 23-ம் தேதி (இன்று) முதல் 26-ம் தேதி வரை இந்த தடத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 7.30க்கு புறப்படும் சூலூர்பேட்டை மின்சார ரயில் (42407) எலவூர் வரை மட்டுமே இயக்கப்படும். இதேபோல், சூலூர்பேட்டையில் இருந்து புறப்பட வேண்டிய மின்சார ரயில் (42406) எலவூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x