Published : 23 Jan 2015 12:29 PM
Last Updated : 23 Jan 2015 12:29 PM
எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியத் தொகை வங்கிக் கணக்குக்கு வரவில்லை என ‘தி இந்து உங்கள் குரல்’ சேவையில் வாசகர் ஒருவர் புகார் பதிவு செய்தார்.
இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. மானியத் தொகை விரைவில் வங்கிக் கணக்குக்கு வந்துசேரும் என்று அதிகாரிகள் கூறினர்.
‘தி இந்து’வின் ‘உங்கள் குரல்’ சேவையில் காரப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் பதிவு செய்த புகாரில் கூறியதாவது:
எரிவாயு சிலிண்டர்களுக்கு நேரடி மானியத் திட்டம் வழங்கும் புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. எரிவாயு சிலிண்டரை முழுத் தொகை கொடுத்து வாங்கிய பிறகு, அதற்கான மானியம் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஜனவரி மாதம் முதல் புதிதாக எரிவாயு சிலிண்டர் வாங்குபவர் களுக்கு அதற்கான மானியம் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. வங்கி, எரிவாயு விநியோகஸ்தர்கள் இதுபற்றி சரியான பதில் அளிக்கவில்லை. எரிவாயு சிலிண்டருக்கான மானியத் தொகை கிடைக்குமா, கிடைக்காதா என்று பலரும் அச்சத்தில் உள்ளனர்.
இவ்வாறு ராஜா கூறினார்.
இதுகுறித்து வங்கிகள் வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘‘இத்திட்டம் தற்போதுதான் தொடங்கப்பட்டுள்ளது. தொடக் கத்தில் சிற்சில பிரச்சினை கள் இருக்கலாம். விரைவில் சரியாகிவிடும்’’ என்றனர்.
எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, ‘‘நேரடி மானியத் திட்டத்துக்கு பதிவு செய்துள்ளவர்களுக்கு மானியத் தொகை அனுப்பும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் அனைவருக்கும் இத்தொகை கிடைக்கும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT