Published : 16 Sep 2016 09:44 AM
Last Updated : 16 Sep 2016 09:44 AM
உள்ளாட்சித் தேர்தல் முன் னேற் பாடு பணிகள் குறித்து திருநெல் வேலி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சி யர் அலுவலகங்களில் நேற்று நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் பேசியதாவது:
ஊராட்சி பகுதியில் தேர்தலை நடத்த ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர், நகராட்சிப் பகுதியில் தேர்தல் நடத்திட நகராட்சிகள் இயக்குநர், பேரூராட்சிப் பகுதி யில் தேர்தல் நடத்திட பேரூராட்சி களின் இயக்குநர் ஆகியோர் மாநில தேர்தல் அலுவலர் களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்ட ஆட்சியர் களும், மாவட்ட தேர்தல் அலு வலர்களாக நியமிக்கப்பட்டுள் ளனர்.
மேலும், மாவட்ட ஆட்சியர்கள் மூலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவ லர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு பேரூராட்சிகளின் செயல் அலு வலர்கள், மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அலு வலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் வாக்குச் சாவடி இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 1.9.2016 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, புதிய வாக்காளர் சேர்ப்பு மற்றும் செம்மைப்படுத்தும் பணி நடை பெற்று வருகிறது. அதை அடிப் படையாகக் கொண்டு, உள்ளாட் சித் தேர்தலுக்கான முதல் துணைப் பட்டியல் தயார் செய் யும் பணிகள் 18.9.2016 முதல் 26. 9.2016 வரை நடைபெற உள்ளது.
வாக்காளர் பட்டியல் 2-ம் துணைப்பட்டியல் வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி நாள் வரை வாக்காளர் பதிவு அலுவலரால் மேற்கொள்ளப்பட்டுள்ள பதிவுகளுடன் துணைப்பட்டியல் வெளியிடப்படும்.
27.9.2016 முதல் 1.10.2016 வரை வாக்காளர்களுக்கு வழங் கும் புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் அச்சடிக்கும் பணிகள் நடைபெறும். தமிழகத்தில் உள் ளாட்சித் தேர்தலுக்காக ரூ.182 கோடியை அரசு அனுமதித் துள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT