Published : 05 Jan 2017 08:30 AM
Last Updated : 05 Jan 2017 08:30 AM
மத்திய அரசின் உதய் திட்டத்தில் இணைவது தொடர்பாக தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
தமிழக அமைச்சரவையின் கூட்டம் தலைமைச் செயலகத் தில் நேற்று நடந்தது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறைச் செயலாளர் சண்முகம் உள்ளிட் டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மத்திய அரசின் உதய் திட்டத்தில் இணைவது, விவசாயிகளுக்கு வறட்சி நிவார ணம் வழங்குவது தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரி கிறது. முன்னதாக மாணவர் களுக்கு இலவச சைக்கிள், பொங்கலுக்கான இலவச வேட்டி சேலை ஆகிய திட்டங்களை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT