Published : 22 Mar 2017 05:51 PM
Last Updated : 22 Mar 2017 05:51 PM
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், 'உச்ச நீதிமன்றத்தில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போதெல்லாம் கர்நாடக அரசு இவ்வளவு தண்ணீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றிலிருந்து திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும். ஆனால் இந்த உத்தரவை கர்நாடக அரசு ஏற்காமல், தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட மறுக்கிறது.
காவிரி நீர் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நேற்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற போது ஏற்கெனவே கர்நாடக அரசு தமிழகத்திற்கு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவில் மாற்றமில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் கர்நாடக முதல்வர் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று மீண்டும் பிடிவாதம் செய்கிறார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
எனவே மத்திய அரசு உடனடியாக கர்நாடக அரசை கண்டித்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வலியுறுத்த வேண்டும்' என்று வாசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT