Published : 28 Jun 2016 08:55 PM
Last Updated : 28 Jun 2016 08:55 PM

இளங்கோவனின் வழிகாட்டுதல் இல்லாதது காங்கிரஸுக்கு இழப்புதான்: குஷ்பு

தமிழக காங்கிரஸின் மிகச்சிறந்த தலைவர்களில் இளங்கோவனும் ஒருவர். அவரது வழிகாட்டுதல் இல்லாதது இழப்புதான் என்று குஷ்பு கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அக்கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், ''தமிழக காங்கிரஸின் மிகச்சிறந்த தலைவர்களில் இளங்கோவனும் ஒருவர். அவரது வழிகாட்டுதல் இல்லாதது இழப்புதான். அவரது தலைமையில் காங்கிரஸ் கட்சி வளர்ச்சி அடைந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகினாலும் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர் காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றுவார்'' என தெரிவித்துள்ளார்.

ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாதவர்கள் 8 தொகுதிகளில் வென்ற காங்கிரஸை குறை சொல்கிறார்கள் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவு செய்துள்ளார்.

இளங்கோவன் பதவி விலக குஷ்புவும் ஒரு காரணம் என செய்திகள் வெளியான நிலையில், இளங்கோவனுக்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x