Published : 26 Jan 2015 01:31 PM
Last Updated : 26 Jan 2015 01:31 PM
தமிழக அமைச்சரவையில் இந்து அறநிலையத்துறை இலாகா பொறுப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்துறை பொறுப்பு உணவு அமைச்சர் காமராஜூக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். தொடர்ந்து அவர் மருத்துவமனையில் உள்ளதால் அவரது இலாகா மாற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பரிந்துரையை ஏற்று அமைச்சரவை இலாகா மாற்றம் செய்ய ஆளுநர் கே.ரோசய்யா உத்தரவிடப்பட்டுள்ளார். இதன்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக உள்ள செந்தூர் பாண்டியன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் உள்ளதால் அவரது இலாகா பொறுப்பு உணவு அமைச்சராக உள்ள காமராஜூக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், செந்தூர்பாண்டியன் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்ற முதல்வரின் பரிந்துரையும் ஏற்கப்படுகிறது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT