Published : 05 Jan 2017 08:41 AM
Last Updated : 05 Jan 2017 08:41 AM

இலவச வேட்டி, சேலை மற்றும் சைக்கிள் வழங்கும் திட்டங்கள்: முதல்வர் பன்னீர்செல்வம் தொடங்கினார்

பொங்கலையொட்டி இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான இலவச சைக்கிள் வழங்கும் திட்டங்களை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

விவசாயத்தை அடுத்து கிராமப்புற மக்களின் வாழ்வா தார தொழிலாக நெசவுத் தொழில் உள்ளது. கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு அளிக்கவும், அதன் மூலம் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், கடந்த 1983-ம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வர் எம்ஜிஆரால் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

இதன்படி, ஒவ்வோர் ஆண்டும் பொங்கலையொட்டி, இலவச வேட்டி, சேலைகள் வழங்கப் பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் ஏழை மக்கள் பயன்பெறு வதுடன், கைத்தறி, விசைத் தறி தொழில்களில் ஈடுபட்டுள்ள வர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.

இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் மூலம் தரமான வேட்டி, சேலைகளை வழங்கும் நோக்கில் கடந்த 2014-ம் ஆண்டு பொங்கல் முதல் பாலிகாட்டன் சேலைகளை வழங்க மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு, வழங் கப்பட்டு வருகிறது.

7 குடும்பங்களுக்கு..

இந்தாண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத் தில் ஒரு கோடியே 62 லட்சத்து 42 ஆயிரத்து 717 சேலைகள், ஒரு கோடியே 62 லட்சத்து 24 ஆயிரத்து 223 வேட்டிகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்துக்கு தமிழக அரசு ரூ.486 கோடியே 36 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.

பொங்கலையொட்டி இந் தாண்டுக்கான இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தொடங்கிவைத்தார். தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 7 குடும்பங்களுக்கு வழங்கினார்.

இலவச சைக்கிள்

அதேபோல், 2016-17-ம் கல்வியாண்டில், ரூ.243 கோடியே 96 லட்சம் மதிப்பில், பிளஸ் 1 படிக்கும் 2 லட்சத்து 70 ஆயிரத்து 417 மாணவர்கள், 3 லட்சத்து 48 ஆயிரத்து 865 மாணவியர் என 6 லட்சத்து 19 ஆயிரத்து 282 பேருக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தையும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். 7 மாணவ, மாணவி யருக்கு இலவச சைக்கிள்களை அவர் நேற்று வழங்கினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சரோஜா, ஓ.எஸ்.மணியன், ஆர்.பி. உதயகுமார், ராஜலட்சுமி, தலை மைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால், செயலர்கள் ஹர்மந்தர் சிங், பி.சந்திரமோகன், ஆ.கார்த்திக், தயானந்த் கட்டாரியா ஆகியோர் இருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x