Published : 31 Jan 2017 09:16 AM
Last Updated : 31 Jan 2017 09:16 AM

இப்போது 3 நாளில் முடிகிறது என்றால் ஜல்லிக்கட்டுக்காக 3 ஆண்டுகளாக அவசர சட்டம் கொண்டு வராதது ஏன்?- சட்டப்பேரவையில் ஸ்டாலின் கேள்வி

தற்போது 3 நாட்களில் ஜல்லிக் கட்டுக்கு அவசரச் சட்டம் கொண்டு வந்த அரசு, கடந்த 3 ஆண்டுகளாக அதைச் செய்யாதது ஏன்? என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று நடந்த விவாதம்:

பி.மூர்த்தி (திமுக):

அதிமுக ஆட்சியில்தான் ரேக்ளா ரேஸ் மற்றும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்:

அரசு விதிக்கவில்லை; தடை விதித்தது நீதிமன்றம்தான். கடந்த 2006-ல் நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டபோது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வற்புறுத்தி வந்தார். தற்போது பிரதமரைச் சந்தித்து மாநில அளவில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டு, பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.

மு.க.ஸ்டாலின் (எதிர்க்கட்சித் தலைவர்):

திமுக ஆட்சியின் போது தடை விதிக்கப்பட்டாலும், தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட் டியை நடத்தி வந்தோம். தற்போது 3 நாட்களில் முயற்சி எடுத்து அவசரச் சட்டம் கொண்டு வந்த நீங்கள், 3 ஆண்டுகளாக அவசரச் சட்டத்தை இயற்றாதது ஏன்?

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்:

திமுக ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட சட்டத்தால் 2014 வரை ஜல்லிக்கட்டு நடந்தது. அதன்பின் தடை விதிக்கப்பட்டதால், பிரத மருக்கு தொடர்ந்து கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

சட்டத்திருத்தம்

இதன் விளைவாகத்தான் கடந்த 2016-ல் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்தது. அதையும் உச்ச நீதிமன்றம் தடை செய்தது. அதன்பின் தற் போது சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இவ்வாறு விவாதம் நடந்தது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x